உள்ளூர் செய்திகள்
பந்தலூரில் டேன்டீ தொழிலாளர்கள் -வேலைநிறுத்தம் மறியல்
- பந்தலூரில் டேன்டீ தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்தனர்
- பேரணியாக சென்று அவர்கள் மறியலிலும் ஈடுபட்டனர்
ஊட்டி:
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு உடனடி தீர்வு காண வேண்டும், தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக டேன்டீ தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர்.
அதன்படி அன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் பந்தலூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.
திடீரென அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்க கொடிகளுடன் ஊர்வலமாக வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.