உள்ளூர் செய்திகள்

பலத்த சூறாவளி காற்றால் கீழே விழுந்த மின் கம்பம். 

குறிஞ்சிப்பாடியை சூறையாடிய சூறாவளி காற்று

Published On 2023-05-27 06:06 GMT   |   Update On 2023-05-27 06:06 GMT
  • நேற்று மாலை குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்மழை பெய்தது.
  • மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் சாய்ந்ததால் பல்வேறு ழுலு பல இடங்களில் மின்கம்பம் உடைந்தது இதனால் மின்தடை ஏற்பட்டது

கடலூர்:

கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் கடலூர் மாவட்டம் முழுதும் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதில் நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்தவேப்பமரம், தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் சாய்ந்ததால் பல்வேறு இடங்களில் மின்கம்பம் உடைந்தது இதனால் மின்தடை ஏற்பட்டது .

இதே போல குறிஞ்சிப்பாடியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் மேச்சலில் இருந்த கறவை மாடு மீது மின்னல் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே அந்த மாடு உயிரிழந்தது. இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் மூதாட்டி லட்சுமி என்பவர் கதறி அழுதது பலரையும் சோகத்தில் அழுத்தியது. சூறாவளிக்காற்று மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த மழை போன்றவற்றால் சற்று குளுமையான சூழல் நிலவியது.

Tags:    

Similar News