உள்ளூர் செய்திகள்

பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்ட மாணவிகள்.

பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி

Published On 2023-06-27 09:39 GMT   |   Update On 2023-06-27 09:39 GMT
  • நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது.
  • கோவில் வளாகத்தில் பள்ளி மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் உள்ள பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது.

ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.

திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில் செயல் அலுவலர் முருகையன் உழவார பணியை தொடங்கி வைத்தார்.

முன்னதாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட உதவி அலுவலர் பிரேமா தேவி அனை வரையும் வரவேற்றார்.

நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கோவில் வளாகத்தில் உழவாரப்பணி மேற்கொண்டனர். இதில் யோகா பயிற்றுனர் ஹரி கிருஷ்ணன், சர்வாலய உழவாரப்பணி செயலாளர் ஜெயபிரகாஷ், துணை தலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முடிவில் ஆசிரியை சத்யா நன்றி கூறினார்.

பணிக்கான ஏற்பாடுகளை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிர்வா கத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News