உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் 

கடலூர் மாவட்டத்தில் 10 கிராமங்களில் பொது வினியோகத் திட்ட குறைதீர்வு முகாம்கள்- கலெக்டர் தகவல்

Published On 2022-06-09 12:32 GMT   |   Update On 2022-06-09 12:32 GMT
  • அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.
  • கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்

கடலூர்:

கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

கடலூர் மாவட்டத்தில் நாளை மறுதினம் (11- ந்தேதி) கீழ்கண்ட வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் கடலூர் தோட்டப்பட்டு, பண்ருட்டி சிறுகிராமம், குறிஞ்சிப்பாடி ஆதிநாராய–ணபுரம் (கிழக்கு), சிதம்பரம் கிள்ளை (தெற்கு), காட்டுமன்னார்கோயில் குமாரகுடி, புவனகிரி சி. புதுப்பேட்டை, விருத்தாசலம் மாத்தூர், திட்டக்குடி எறையூர், வேப்பூர் மண்ணம்பாடி, திருமுட்டம் சோழதரம் கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும்.

மேற்குறிப்பிட்ட கிராமங்களில் கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுப்பட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அனுப்பலாம் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்க–லாம்.

தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேற்படி முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை–களான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடை பிடித்தல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News