உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட முதலையை படத்தில் காணலாம்.

சிதம்பரம் அருகே தோட்டத்தில் புகுந்த முதலை: வனத்துறையினர் பிடித்து ஏரியில் விட்டனர்

Published On 2023-10-12 07:35 GMT   |   Update On 2023-10-12 07:35 GMT
  • காமராஜ் வீட்டு தோட்டத்தில் சுமார் 9 அடி நீளமுள்ள140 கிலோ மதிக்கத்தக்க முதலை புகுந்தது.
  • வன ஊழியர்கள் புஷ்பராஜ் ஆகியோர் முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் உள்ள காமராஜ் வீட்டு தோட்டத்தில் சுமார் 9 அடி நீளமுள்ள140 கிலோ மதிக்கத்தக்க முதலை புகுந்தது. மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் படி சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர்பிரபு,சிதம்பரம் பீட் வன க்காப்பாளர்அன்புமணி, புவனகிரி பீட் வனக்காப்பாள ர்ஞா னசேகர்,வனகாப்பாளர் அலமேலு, வன ஊழியர்கள் புஷ்பராஜ் ஆகியோர் முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.

Tags:    

Similar News