உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பு - கலெக்டர் ஆகாஷ் தகவல்

Published On 2023-01-16 08:29 GMT   |   Update On 2023-01-16 08:29 GMT
  • தென்காசி மாவட்டம் சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ளது.
  • பொது மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் நாளைக்குள் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்டம் சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ளது.

தற்போது பொதுப்பிரிவு (15 முதல் 35 வயது வரை), பள்ளி (12முதல் 19 வயது வரை), கல்லூரி (17 முதல் 25 வயது வரை) கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் நாளைக்குள் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு 04633- 212580 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News