உள்ளூர் செய்திகள்

கொரோனா கட்டுப்பாடு விதிமுறை அமல் ஆணையாளர் அறிவிப்பு

Published On 2022-07-24 08:26 GMT   |   Update On 2022-07-24 08:26 GMT
  • தமிழக அரசின் உத்தரவின்படி கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

ஆத்தூர்:

ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் வசந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும்.

தமிழக அரசின் உத்தரவின்படி கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக் கவசமின்றி கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கவோ பொருட்கள் வழங்கவோ கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் கட்டாயம் கிருமி நாசினி அல்லது சோப்பு வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் அதனை கட்டாயம் பயன்–படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். கடைகளில் வாடிக்கையாளர்கள் சுமார் 6 அடி சமூக இடைவெளியை கடை–பிடிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். நகராட்சி அதிகாரிகளின் ஆய்வின்போது முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதோடு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News