ஊட்டியில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடக்கவிழா
- கூட்டுறவு பயிற்சி மாணவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான புத்தகங்களை வழங்கப்பட்டது.
- 2022-23-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடக்கவிழா நடந்தது
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய கிளையில் 2022-23-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தொடக்கவிழா நடந்தது. விழாவில் கூட்டுறவு சங்கங்களின் நீலகிரி மண்டல இணைப்பதிவாளர்(முழு கூடுதல் பொறுப்பு) டி.பிரபு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பட்டய பயிற்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கூட்டுறவு பயிற்சி மாணவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான புத்தகங்களை வழங்கினார். இதில் கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப்பதிவாளரும், முதல்வருமான கிருஷ்ணன், துணைப்பதிவாளர் சரவணன், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான முத்து சிதம்பரம், குன்னூர் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் குமாரசுந்தரம், கோவை துணைப்பதிவாளர் கே.ஆர்.ராஜேந்திரன், விரிவுரையாளர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.