உள்ளூர் செய்திகள்

விழாவில் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் பீட்டர் தேவதாஸ் மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய காட்சி.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Published On 2022-09-22 07:00 GMT   |   Update On 2022-09-22 07:00 GMT
  • நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறி யியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
  • தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் பீட்டர் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 200 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

நாசரேத்:

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறி யியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

நாசரேத் திருமண்டல உப தலைவர் தமிழ் செல்வன் தலைமை தாங்கினார்.கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் பீட்டர் தேவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 200 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருமண்டலகுருத்துவ செய லாளர் இம்மானுவேல்வான் ஸ்டக், திருமண்டல'லே' காரியதரிசி கிப்ட்சன், திருமண் டல உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிக ளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தா ளாளர் ஜாண்சன், கல்லூரி ஆட்சிமன்றகுழு உறுப்பினர் கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாசரேத் சேகர கமிட்டி உறுப் பினர்கள் கலந்து கொண்ட னர். முடிவில் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News