உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு

Published On 2022-08-05 09:07 GMT   |   Update On 2022-08-05 09:07 GMT
  • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
  • ஏற்காட்டில் அதிக பட்சமாக 32 மி.மீ. பதிவு

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

ஏற்காட்டில் கன மழை

குறிப்பாக ஏற்காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாகலூர் கிராமத்தில் மரப்பாலம் பகுதியில் சிறிய ஓடை உள்ளது. இந்த ஓடையில் நீர்வரத்து அதிகரித்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் அந்த வழியாக செல்லும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேற்றிரவு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இன்று அதிகாலை முதல் அந்த ஓடையில் தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அதே வழியாக போக்குவரத்து தொடங்கி உள்ளது.

இதே போல மேட்டூர், தம்மம்பட்டி உள்பட பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் 

Tags:    

Similar News