உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் குடிநீர் ஆதாரங்களை கண்டறிதல் குறித்த ஆலோசனை கூட்டம்

Published On 2023-05-08 15:15 IST   |   Update On 2023-05-08 15:15:00 IST
  • பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் தரத்தினை உறுதி செய்ய வேண்டும்
  • அனைத்து துறை அலுவலர்களும் நீர் ஆதாரங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், ஜல் சக்தி அபியான் 2023 குடிநீர் ஆதாரங்கள் கண்டறிதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்கள் கண்டறிந்து பாதுகாத்தல், ஆழப்படுத்துதல் தொடர்பான திட்ட அறிக்கைகளை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

அனைத்து திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்குவது புவி குறியீடு புகைப்படம் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி உள்ளிட்ட அனைத்து துறை நிதி ஆதாரங்கள் மூலம் குடிநீர் தொடர்பான பணிகளான குழாய் மூலம் குடிநீர் வழங்குதல், சர்வே பணிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நிலத்தடி நீரை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் தரத்தினை உறுதி செய்ய வேண்டும். நீர் கட்டமைப்புகளை புதுப்பித்தல், நீர் நிலைகளை ஆழப்படுத்துதல், மேம்படு த்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கரைகளை மேம்படுத்துதல், தொடர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நீர் நிலைகளை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல், குப்பைகளை நீர்நிலைகளில் போடுவதை தடை செய்ய வேண்டும். பருவ மழைக்கு முன் மற்றும் பின் வேதியியல், உயிரியியல் ரீதியாக குடிநீர் தரத்தினை கண்காணிக்க வேண்டும்.

வருகிற ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் ஜல் சக்தி அபியான் திட்டப் பணிகள் திட்டம் தயாரித்தல் மற்றும் மேற்கொள்ளுதல் வேண்டும். வருகிற அக்டோபர் மாதத்திற்குள் நீர் ஆதாரங்களை ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். நவம்பர் மாத இறுதிக்குள் பொதுமக்களுக்கு சிறப்பு கிராம சபை மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், அனைத்து துறை அலுவலர்களும் நீர் ஆதாரங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும். கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அதிக அளவில் செடிகள் நடவு செய்து, புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தோட்டக்கலைத்துறை, கல்வித் துறை மற்றும் நேரு யுவகேந்திரா துறை அலுவலர்கள் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்மேலாண்மை தொடர்பான போதிய விளம்பரம் செய்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து, அவர்களை திட்ட பணிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான வந்தனா கார்க், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன் மறறும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News