உள்ளூர் செய்திகள்

மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-28 08:14 GMT   |   Update On 2022-06-28 08:14 GMT
  • அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தூத்துக்குடி:

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ் , மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஐ.என்.டி.சி. ராஜ்,மண்டல தலைவர்கள் பிரபாகரன், ஜசன்சில்வா, சேகர்,செந்தூர்பாண்டி, மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவர் ராஜா,

மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன்,அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ்.பி.ராஜன் , ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி,மாணவர் காங்கிரஸ் மாநகர் தலைவர் பிரவீன்துரை, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்,மீனவரணி மாநகர தலைவர் ரொனால்டு, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,

மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, மாவட்ட நிர்வாகிகள் கோபால்,ராதாகிருஷ்ணன்,சாமுவேல்ஞானதுரை, கதிர்வேல், மகாலிங்கம், வாசிராஜன், கனகராஜ், சித்திரைபால்ராஜ், தனுஷ், நிர்மல் கிறிஸ்டோபர், சின்னகாளை,சண்முகசுந்தரம், சுசைவியாகுலம், ஜெயகிங்ஸ்டன், ஜெயராஜ், மகாராஜன், கருப்பசாமி, முருகன்,குமாரமுருகேசன், புஷ்பராஜ், ராஜரத்தினம், முனியசாமி இசக்கிபாண்டியன், நெப்போலியன், நவ்ரோஜ், நடேஷ்குமார், கிருஷ்ணன்,கணேசன்,உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News