உள்ளூர் செய்திகள்

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2023-10-31 04:55 GMT   |   Update On 2023-10-31 04:55 GMT
  • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.5560 மதிப்பிலான காதொலி கருவிகள் 6 பேருக்கும், ரூ.9050 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள் 3 பேருக்கும் என 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71630 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

மேலும் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, சிறுபான்மையினர் நல அலுவலர் இந்துமதி, ஆதி திராவிடர் நல அலுவலர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News