உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே வீட்டிற்கு சென்று கைரேகை வாங்கிய வங்கி ஊழியர்கள் பணம் தரவில்லை என புகார்

Published On 2023-07-11 07:42 GMT   |   Update On 2023-07-11 07:42 GMT
  • வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக ரூ.9 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • கைரேகை ஏதும் பெறப்படவில்லை. ஆனால், கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது

கடலூர்:

தமிழகத்தில் பிரதம மந்திரி தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிவறை கட்டும் பணி நடந்துவருகிறது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக ரூ.9 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் கீழ்மாம்பட்டு ஊராட்சியில் 19 பேர் கழி வறை கட்டியுள்ளனர். இதில் ரத்தினாம்பாள், ஜெக தாம்பாள், கலியமூர்த்தி ஆகிய 3 பேருக்கு மானியத் தொகை வழங்கப்பட்டது. பல்லவன் கிராமப்புற வங்கியில் இருந்த பயனாளி களின் வங்கி கணக்கில் மானியத் தொகை செலுத் தப்பட்டது. இதில் ஜெகதாம் பாள், கலியமூர்த்தி ஆகியோ ரின் வீட்டிற்கு சென்ற வங்கி ஊழியர்கள், பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பெற்றுள்ளனர். சிறிது நேரத்தில் வந்து பணம் தருவதாக கூறிச் சென்றுள்ளனர். பின்னர் யாரும் வந்து தரவில்லை.

அதேசமயம் ரத்தினாம் பாளிடம் கைரேகை ஏதும் பெறப்படவில்லை. ஆனால், கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 பேரும் பல்லவன் கிராம வங்கிக்கு சென்று, நடந்த சம்பவத்தை மேனேஜரிடம் கூறியுள்ளனர். இது தொடர் பாக விசாரிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், இது தொடர் பாக பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் கலெக்ட ருக்கும் புகார் மனு அனுப்பி யுள்ளனர். இந்த சம்பவம் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களி டையே காட்டுத் தீ போல பரவியது. இதனால் தங்கள் வங்கி கணக்கில் பணம் உள்ளதா என்பதை உறுதி செய்ய பொதுமக்கள் வங்கிக்கு செல்கின்றனர். இதனால் பண்ருட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News