மதுக்கூரில், சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
- பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
- மதுக்கூரில் தெரு நாய்கள், பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
மதுக்கூர்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம்,மதுக்கூர் கிளையின் சார்பாக சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மதுக்கூர் கிளை பொறுப்பாளர் சேக்தாவுது தலைமையில் நடைபெற்றது.
மாவட்டதலைவர் ராஜிக்முகமது, மாவட்டச் செயலாளர் ஹாஜாஜி யாவுதீன், துணைத்தலைவர் வல்லம் ஜாபர், மாவட்ட பொருளாளர் அப்துல் அமீது, மாவட்ட துணைச் செயலாளர்கள் வல்லம் அப்துல்லா,அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிளை நிர்வாகிகள்ஆசிப் அலி, சலீம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதில், மாநில பொதுச்செயலாளர் அப்துல்கரீம், மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் , பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்ற முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மதுக்கூரில் தெரு நாய்கள், பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் கிளை பொறுப்பாளர் ஆசிப் அலி நன்றி கூறினார்.