உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

ஒட்டன்சத்திரத்தில் தர்ணா போராட்டம்

Published On 2022-08-23 05:21 GMT   |   Update On 2022-08-23 05:21 GMT
  • வீரலப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வீரலப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது. சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். டாஸ்மாக் சில்லறை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். 100 நாள் வேலை ஊழல்களை தடுக்க வேண்டும்.

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பாப்புசாமி தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன் சிறப்புரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் சிவமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆறுச்சாமி, மனோகரன், முருகேசன், கிளைச் செயலாளர் விக்னேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News