உள்ளூர் செய்திகள்

திட்டச்சேரியில் மறியல் போராட்டம் நடந்தது.

திட்டச்சேரியில் மா.கம்யூனிஸ்டு மறியல் போராட்டம்

Published On 2023-09-08 09:57 GMT   |   Update On 2023-09-08 09:57 GMT
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
  • அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி தபால் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேணு தலைமை தாங்கினார்.

கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு,முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் பொன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்,அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் மாவட்ட குழு உறுப்பினர் லெனின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதி, பாலு, காரல்மார்க்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News