உள்ளூர் செய்திகள்

புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.

கல்லூரியில் தொடர்பு திறன் மற்றும் புத்தகங்கள் வெளியீட்டு விழா

Published On 2022-09-21 07:59 GMT   |   Update On 2022-09-21 07:59 GMT
  • சிறப்பு சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் வெளியிடும் விழா நடைபெற்றது.
  • ஆங்கிலத்தில் எழுதிய மற்றும் தொகுப்பாக்கம் செய்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஆங்கிலத் துறை சார்பாக தொடர்புத் திறன் மற்றும் புத்தகங்கள் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆங்கிலத் துறையின் சார்பாக "தொடர்புத் திறன்" என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் புத்தகங்கள் வெளியிடும் விழாவானது நடைபெற்றது.

முனைவர் அசாருதீன் வரவேற்றார்.

கல்லூரியின் முதல்வர் நடராஜன் தலைமையுரை வழங்கினார். முனைவர் முகம்மது இஸ்மாயில், முனைவர் கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கல்வி குழுமத்தின் தலைவர் ஸ்ரீமதி. ஜோதிமணி அம்மா, செயலர் செந்தில் குமார், இணைச் செயலாளர் சங்கர் கணேஷ், மற்றும் ஆலோசகர் செவாலியர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பேராசிரியர் முனைவர் அசாருதீன் ஆங்கிலத்தில் எழுதிய மற்றும் தொகுப்பாக்கம் செய்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

பின்னர் அந்த புத்தகங்களை மதிப்பாய்வு செய்து இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினரான கோபிநாத், ஆங்கிலத்துறையின் தலைவர் முத்துகுமார், மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் குணாளன் உரையாற்றினர்கள்.

அதனை தொடர்ந்து ஆங்கில மொழி கற்றலின் சிறப்புகளையும், அதன் முக்கியத்துவம் குறித்தும் சிறப்பு விருந்தினர் கோபிநாத் சிறப்புரையாற்றி, மாணவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து மாணவ ர்களுடன் உரையாடினார்.

நிகழ்வின் இறுதியில் முனைவர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News