உள்ளூர் செய்திகள்

வெங்காய தாமரை செடிகள் அகற்றும் பணி நடந்தது.

வெங்காய தாமரை செடிகள் அகற்றும் பணி தொடக்கம்

Published On 2023-03-15 08:29 GMT   |   Update On 2023-03-15 08:29 GMT
  • வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது.
  • இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி நீர்நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்:-

மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கின்ற நீராதாரங்களை பாதுகாத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. ஆறு, குளம், குட்டைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது, நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே, இந்த செடிகளை முற்றிலும் அகற்றி அதனை நகராட்சி நுண்ணுர தயாரிப்பு மையம் மூலம் பாலம் சேவை நிறுவனத்தின் மேற்பார்வையில் இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News