உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சித்தி புத்தி தட்சணாமூர்த்தி விநாயகர்.

மெலட்டூர் சித்தி புத்தி தட்சணாமூர்த்தி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்

Published On 2023-09-08 15:54 IST   |   Update On 2023-09-08 15:54:00 IST
  • இன்று காலை தொடங்கி வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெற உள்ளது.
  • வருகிற 15-ந் தேதி சுவாமி, அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பாப நாசம் தாலுக்கா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோயில் 10 நாட்கள் உற்சவம் இன்று 8 ந்தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. வரும் 15ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

ஸ்ரீசித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர்கோயில் விவாஹ வரம் தந்து அருளக்கூடியவர்

ஸ்ரீஞானபுரத்தில் ஸ்ரீகர்க மஹரிஷியால் வர்ணிக்கப்பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களுள் 81-வது ஸ்தலமாக உள்ளது.

இந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் மெலட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது இங்கு வருடந்தோறும் விநாயகர் சதர்த்திவிழா 10 நாட்கள் பிரமோற்சவம் நடந்துவருகிறது பிரமோற்ச வத்தின் முக்கிய நிகழ்வாக ஏழாவது நாள் நிகழ்ச்சியன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறும் ஸ்ரீவிநாயகர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி மிக அரிதான நிகழ்ச்சியாகும்.

அன்றைய தினம் காலையில் ஸ்ரீ தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெறும் இது தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இந்நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

திருமணம் ஆகாதவர்களும், திருமணம் காலதாமதமாகும் ஆண்களும்,பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து ஸ்ரீசித்தி புத்தி ஸமேத ஸ்ரீதெட்சணா மூர்த்தியை தரிசித்து பிரார்த்தனை செய்து மலர் மாலையும், மஞ்சள் கயறும் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது இக்கோயிலின் சிறப்பாகும்.

இந்த ஆண்டு பிரமோத்ச வம் செப்டம்பர் மாதம் 8ந்தேதி இன்று காலை தொடங்கி 18 ந்தேதிவரை 10 நாட்கள் நடைபெறுகிறது. 7ஆம் நிகழ்ச்சியாக 15 -ம்தேதி காலை 9.30 மணியளவில் பிரமோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News