உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவி மாயம் தாய் போலீசில் புகார்
- பவித்ரா கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்பினார்.
- வீடு திரும்பிய போது பவித்ராவை வீட்டில் காணவில்லை.
கடலூர்:
சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் உள்ள பூதவராயன்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன் என்பவரது மகள் பவித்ரா (வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இரண்டா மாண்டு பி.ஏ., படித்து வருகிறார்.
இவர் நேற்று கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவரை வீட்டிலியே இருக்க சொல்லிவிட்டு அவரது தாயார் கடைக்கு சென்றார். வீடு திரும்பிய போது பவித்ராவை வீட்டில் காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் பலனில்லை. இதையடுத்து இவரது தாயார் விஜியலட்சுமி (வயது 50) புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்தார். புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.