தியாகதுருகம் அருகே கல்லூரி மாணவி மாயம்: தாய் போலீசில் புகார்
- அமுதா (வயது 40). இவரது கணவர் இறநது விட்டதால் தனது தாய் வீட்டில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.
- வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் பிரியதர்ஷினியை (19) காணவில்லை.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி அமுதா (வயது 40). இவரது கணவர் இறந்து விட்டதால் தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் தனது தாய் வீட்டில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அமுதா விவசாய வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் ரியதர்ஷினியை (19) காணவில்லை. இவர் தலைவாசல் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அமுதா தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் சங்கராபுரம் அருகே பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் மகன் குருபாலன் (20) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.