உள்ளூர் செய்திகள்
சிதம்பரத்தில் கல்லூரி மாணவி மாயம்
- தானிய ஸ்ரீ நேற்று கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
- தந்தை ஆறுமுகம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
கடலூர்:
சிதம்பரம் அருகே திருவக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் தானிய ஸ்ரீ. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் தானிய ஸ்ரீ நேற்று கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். மீண்டும் இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தானிய ஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கே தெடியும் தனியா ஸ்ரீ கிடைக்கவில்லை. இதனால் தந்தை ஆறுமுகம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி தானிய ஸ்ரீ எங்கு சென்றார் என்ன ஆனார் யாரேனும் இவரை கடத்திச் சென்றனரா ? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.