உள்ளூர் செய்திகள்

சரவணன் 

ெமாபட் மீது கல்லூரி பஸ் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் பலி

Published On 2023-01-12 08:02 GMT   |   Update On 2023-01-12 08:02 GMT
  • 2016-ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார்.
  • தற்போது சென்னை மாநகர ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சரவணன் (வயது 35).

இவர் கடந்த 2016-ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னை மாநகர ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்தார்.

கல்லூரி பஸ் மோதியது

இந்நிலையில் சரவணன் நேற்று மாலை பரமத்தி சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பரமத்தியில் இருந்து மரவாபாளையம் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற, திருச்செங்கோட்டிலுள்ள தனியார் கல்லூரி பஸ், அதிவேகமாக சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சரவணன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சரவணனை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

வழக்கு பதிவு

கல்லூரி பஸ்சை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லூரி பஸ்சை பறிமுதல் செய்தனர். விபத்தில் பலியான சரவணனுக்கு ராசி (33) என்ற மனைவியும், கார்முகிலன்(5), அகிலன்(1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சரவணன் தற்போது பரமத்தி வேலூரில் உள்ள மாமியார் வீட்டில் குடியிருந்து வந்தார்,

Tags:    

Similar News