உள்ளூர் செய்திகள்

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

சீர்காழி, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் கலெக்டர் 'திடீர்' ஆய்வு

Published On 2023-04-16 08:15 GMT   |   Update On 2023-04-16 08:15 GMT
  • பயன்பாடின்றி வீணாக எரிந்து கொண்டிருக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது.
  • எரிவாயு பைப்லைன் ப்ராஜெக்ட் தொடர்பாக ஆய்வுகள் நடத்தபட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பழைய கிராமத்தை இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் நிறுவனத்தில் பிளான்ட் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

தொழில்துறை செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் சீர்காழி வட்டம் பழையபா ளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் செயல்பாடு களையும், தடையின்மை சான்று பெறப்படாமல் இயக்கத்திலி ருக்கும் துறப்பணக்கிண றுளின் நிலைப்பாடு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து பயன்பாடின்றி வீணாக எரிந்து கொண்டிருக்கக்கூடிய இயற்கை

எரிவாயுவை கெயில் நிறுவனத்தினர்

பயன்படுத்து வது தொடர்பான சாத்திய கூறுகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் அமையப்பெற்றுள்ள எரிவாயு பைப்லைன் ப்ராஜெக்ட் தொடர்பான தடையின்மைக்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தபட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்வாய்வின் போது மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர்,

சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் ஓ.என்.ஜி.சி, கெயில், நிறுவனங்க ளின் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News