உள்ளூர் செய்திகள்

தேவதானப்பட்டி-மஞ்சளாறு சாலையில் பாலம் அமைக்கும் பணியை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரியகுளம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

Published On 2023-08-27 10:09 IST   |   Update On 2023-08-27 10:09:00 IST
  • பாரதி நகரில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பூங்கா அமைக்கும் பணிகளையும் பேரூராட்சி அலுவல கத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
  • ஆய்வின்போது அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேனி:

பெரியகுளம் அருகே தென்கரை, வடுகபட்டி, தேவதானப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தென்கரை பேரூராட்சி பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஹவுசிங்போர்டு காலனியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் கட்டுமான பணிகள், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் குழாய் அமைக்கும் பணிகள், கைலாசப்பட்டி 12-வது வார்டு பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது கழிப்பறை கட்டுமான பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ஸ்டேட்பேங்க் காலனியில் ரூ.11.75 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதித்தல் பணி, பாரதி நகரில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பூங்கா அமைக்கும் பணிகளையும் பேரூராட்சி அலுவல கத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் பொதுநூலகம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டதையும், பெரியகடை வீதியில் 0.980 கி.மீ தூரத்திற்கு ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை புனரமைக்கும் பணிகளையும், மற்றும் பொதுநூலகத்தில் வாசகர்களுக்கு வைக்க ப்பட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் வருகை பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வாசகர்களுக்கான புத்தகங்க ளை முறையாக பராமரித்திட நூலக அலு வலருக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதியில் மஞ்சளாறு சாலை பகுதியில் ரூ.240 லட்சம் மதிப்பீட்டில் 0.025 கி.மீ தூரத்திற்கு பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4-வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நாடக மேடையினையும், மற்றும் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறைகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடி க்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பாலசுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் மணிமாறன், செயல் அலுவலர் நிர்வாகம் (பொறுப்பு) சுப்பிரமணியன், செயல் அலுவலர்கள் மோகன்குமார்(தென்கரை), விஜயா (தேவதானப்பட்டி), சுரேஷ்(வடுகபட்டி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News