உள்ளூர் செய்திகள்
சீர்காழி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை கலெக்டர் ஆய்வு
- அகர திருக்கோவிலக்கா பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.
- பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு அகர திருக்கோவிலக்கா பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீரென ஆய்வு செய்தார்.
மேலும், பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, நகராட்சி ஆணையர் வாசுதேவன், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.