உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.


போடி அருகே அரசு பள்ளி, ஆஸ்பத்திரிகளில் கலெக்டர் திடீர் சோதனை

Published On 2022-06-15 11:15 IST   |   Update On 2022-06-15 11:15:00 IST
  • அரசு பள்ளியில் மாணவர்கள் வருகை குறித்து கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
  • ஆஸ்பத்திரிகளில் அடிப்படை வசதி குறித்து கலெக்டர் திடீர் சோதனை நடத்தினார்.

தேனி:

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட தர்மத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், மேலச்சொக்கநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடை மற்றும் சிலமலையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தர்மத்துபட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவி யர்களின் எண்ணிக்கை, வகுப்பறை, சமையலறை, குடிநீர், மின்வசதி, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள், சுகாதாரப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வகுப்பறைகளுக்கு நேரடியாக சென்று, மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும், தர்மத்துப்ப–ட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தை–களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், எடை அளவிடும் கருவி, விளையாட்டு பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியன குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சிலமலை ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News