உள்ளூர் செய்திகள்

கோவையில் மனைவி - மருமகனை வெட்ட அரிவாளுடன் விரட்டிய தொழிலாளி

Published On 2023-07-04 13:19 IST   |   Update On 2023-07-04 13:19:00 IST
  • கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவருக்கு சந்தேகம்.
  • புகாரின் பேரில் வடக்கிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையம் கோவிந்தனூரை சேர்ந்தவர் 42 வயது பெண். இவர் வடக்கிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நானும் எனது கணவரும் கூலி வேலை செய்து வருகிறோம். நாங்கள் 2 பேரும் வேலைக்கு சென்று விட்டு வந்து ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அப்போது எங்களுக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்படும்.

எங்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். எனது மூத்த மகளின் கணவருக்கும் எனக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக எனது கணவர் சந்தேகப்பட்டார். சம்பவத்தன்று மது போதையில் இருந்த எனது கணவர் என்னையும் எனது மருமகளையும் கொலை செய்வதற்காக வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து விரட்டினார்.

ஆனால் நாங்கள் தப்பித்து ஓடி விட்டோம். எனவே கூறி என்னை கொலை செய்ய திட்டமிட்ட எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் வடக்கிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News