உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்ட வர்த்தக சங்க சின்னியம்பாளையம் கிளை நிர்வாகிகள் கூட்டம்

Published On 2022-08-06 10:05 GMT   |   Update On 2022-08-06 10:05 GMT
  • சின்னியம்பா–ளையம் கிளை நிர்வாகிகள் கூட்டம் சின்னியம்பாளையம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
  • தந்திர தின விழாவை சங்கத்தில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை

கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் சின்னியம்பா–ளையம் கிளை நிர்வாகிகள் கூட்டம் சின்னியம்பாளையம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சின்னியம்பாளையம் கிளை தலைவர் சுடலைமணி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்து அனைவரையும் வரவேற்றார்.


கூட்டத்தில் தலைமை கமிட்டியின் சார்பில் தலைமை தலைவர் முத்துப்பாண்டி, செய்தி தொடர்பாளர் தனிஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, முகக் கவசம் அணிவது, புகையிலை பொருட்களை தடை செய்வது போன்ற விழிப்புணர்வு நோட்டீஸ்களை அனைத்து கடைகளிலும் ஒட்ட செய்வது, சுதந்திர தின விழாவை சங்கத்தில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அலுவலகப் பொறுப்பாளர் ஜெபராஜ், துணை தலைவர்கள் முருகன், கணேசன், ராஜா, துணை செயலாளர்கள் ஜஸ்பர், ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News