உள்ளூர் செய்திகள்

எழுமாத்தூரில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

Published On 2022-08-29 14:21 IST   |   Update On 2022-08-29 14:21:00 IST
  • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
  • விவசாயிகள் 10,330 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

மொடக்குறிச்சி:

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 10,330 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 23 ரூபாய் 90 காசுக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 25 ரூபாய் 29 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 12,132 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 972 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

Tags:    

Similar News