உள்ளூர் செய்திகள்

உறவினருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டு துணிக்கடை மேலாளர் தற்கொலை

Published On 2022-06-21 10:46 GMT   |   Update On 2022-06-21 10:46 GMT
  • கொண்டலாம்பட்டியில் உறவினருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டு துணிக்கடை மேலாளர் தற்கொலை செய்தார்.
  • இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி சுண்ணாம்புகார வீதி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 21). கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு துணிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று தனது உறவினருக்கு செல்போனில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு கோபாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்று கோபாலகிருஷ்ணN உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் கோபாலகிருஷ்ணன் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News