கோவையில் மனைவியை தாக்கிய பெயிண்டர் ஜெயிலில் அடைப்பு
- சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த தனது கணவரிடம் மகேஸ்வரி குடும்ப செலவுக்கு பணம் கொடுக்கும்படி கேட்டார்.
- படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கோவை:
கோவை சொக்கம்புதூர் அருகே உள்ள கருப்பண்ணபதியை சேர்ந்தவர் திலிப்குமார். பெயிண்டர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 24). வேலைக்கு செல்லும் திலிப்குமார் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.
இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த தனது கணவரிடம் மகேஸ்வரி குடும்ப செலவுக் கு பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த திலிப்குமார் தனது மனைவியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து அவர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய பெயிண்டரை கைது செய்து ெஜயிலில் அடைத்தனர்.