உள்ளூர் செய்திகள்

வேதாரண்யம் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி

Published On 2023-09-17 09:22 GMT   |   Update On 2023-09-17 09:22 GMT
  • வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
  • அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்:

சென்னை சுற்றுச்சூழல் துறையும் நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கிரேட் எப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.

தோப்பு துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திலீப் குமார் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.

கடற்கரை தினம் கொண்டாடப்படும் காரணம், கடற்கரை தினத்தை ஒட்டி ஐநா சபை வகுத்த நெறிமுறைகள் மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்தெடுத்தல் இவற்றை பற்றி தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், பசுமை செயல்பாடுகளை கண்காணிக்கும் அலுவலர் பசுமை டிவைனியா மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.

சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்க ளுக்கு பச்சை வண்ண த்தொப்பி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தோப்பு த்துறை அரசினர் மேல்நி லைப்பள்ளி தலைமையாசி ரியர் எஸ் கவி நிலவன் தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன், மாவட்ட சூழல் ஒருங்கிணைப்பாளர். இமய சிவன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணி வண்ணன், மற்றும் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலக கடற்கரை தூய்மை தினத்தை (ஒவ்வொரு வருடம் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை) முன்னிட்டு உலக ஓசோன் தினத்தை முன்னிட்டும் கலைக்கு ழுவினர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

பின்னர் நகராட்சி தலைவர் புகழேந்தி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று உப்பு சத்தியாகிரக மண்டபத்தை அடைந்தது.

மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர். முடிவில் மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News