உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு: வீதி நாடகம், கையெழுத்து இயக்கம்

Published On 2023-07-09 07:04 GMT   |   Update On 2023-07-09 07:04 GMT
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
  • மாமல்லபுரத்தில் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாமல்லபுரம்:

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் "தூய்மை இந்தியா இருவார விழா" என்ற பெயரில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியரிடையே பிளாஸ்டிக் தவிர்ப்பு, மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரிப்பது, சுற்றுப்புற தூய்மை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அவ்வகையில், மாமல்லபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் புராதன சின்னங்கள் பகுதியில் பொம்மலாட்டம், மைன்ட்ஷோ, கையெழுத்து இயக்கம் வாயிலாகவும், துணிப் பைகளை இலவசமாக கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிறுவன பொது மேலாளர் கோமுராஜ், உதவி மேலாளர் ராமலிங்கம், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News