உள்ளூர் செய்திகள்

கோவையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்-கத்திக்குத்து

Published On 2022-08-06 09:49 GMT   |   Update On 2022-08-06 09:49 GMT
  • நவ இந்தியாவில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
  • ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டனர்.

கோவை 

கோவை நவ இந்தியாவில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 2-வது, 3-வது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.


இதில் ஆத்திரம் அடைந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து சிங்காநல்லூர், பீளமேடு போலீசார் இரு தரப்பை சேர்ந்த 15 மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News