உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே பெண்ணை பற்றிய அவதூறு கடிதத்தால் கோஷ்டி மோதல்

Published On 2023-07-13 14:38 IST   |   Update On 2023-07-13 14:38:00 IST
  • களக்காடு அருகே உள்ள கீழஉப்பூரணி நடுத்தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி. அதே ஊரை சேர்ந்த பால்ராஜ் (40) என்பவர், பொன்பாண்டியின் மனைவி குறித்து அவதூறு கடிதம் எழுதி உள்ளார்.
  • இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழஉப்பூரணி நடுத்தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி (வயது 26). விவசாயி. அதே ஊரை சேர்ந்த பால்ராஜ் (40) என்பவர், பொன்பாண்டியின் மனைவி குறித்து அவதூறு கடிதம் எழுதி அதனை பொன்பாண்டி யின் மோட்டார் சைக்கிளில் வைத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.

தாக்குதல்

இதுபற்றி களக்காடு போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து, சமாதா னம் செய்து வைத்துள்ளனர். சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், அவரது மகன்கள் பவுல்தாஸ், பவுல் படஸ் ஆகியோர் சேர்ந்து பொன்பாண்டியை தாக்கினர்.

இதனை தடுக்க வந்த வெள்ளப்பாண்டி, பூபதிராஜை யும் தாக்கினர். மேலும் பூபதிராஜை அரிவாளா லும் வெட்டினர். இதுபோல பொன்பாண்டி, பால்துரை மகன் வெள்ளப்பாண்டி மற்றும் 3 பேர் சேர்ந்து பால்ராஜையும், அவரது மகன் பவுல்தாஸையும் கம்பால் தாக்கினர்.

இந்த மோதலில் பொன்பாண்டி, வெள்ளப்பா ண்டி, பூபதி ராஜ், பால்ராஜ், பவுல்தாஸ் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இதுபற்றி இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News