உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

Published On 2022-08-20 14:39 IST   |   Update On 2022-08-20 14:39:00 IST
  • மாணவர் ஒழுக்கம், கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
  • மாணவர்களிடையே உள்ள தவறான எண்ணங்களை மாற்றி நல்வழி படுத்திட வேண்டும்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்தேகவுடா தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் திரையில் நேரடி ஒளிப்பரப்பை பார்த்து அதன் மூலம் பணிகள் விளக்கங்கள் குறித்து விழிப்புணர்வுகளை தெரிந்து கொண்டனர். எஸ்.எம்.சி தலைவர் கனிமொழி பிளாஸ்டிக் கவர் ஒழிப்பை துரிதபடுத்த வேண்டும், மாணவர் ஒழுக்கம், கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.

பின்னர் பேசிய ஆசிரியர்கள் தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர்கள், பள்ளி மேலாண்மை குழு அமைத்து மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி பெற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து உள்ளனர். அத்திட்டங்களை எஸ், எம், சி குழுக்கள் மாதந்தோரும் தவறாமல் கூட்டம் கூட்டி அரசு வீதி முறைகளை மாணவர்களுக்கு எடுத்து சென்று செயல்படுத்த வேண்டும் . மேலும் மாணவர்களிடையே உள்ள தவறான எண்ணங்களை மாற்றி நல்வழி படுத்திட வேண்டும். மாணவர்களுக்கு அறிவை வளர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என பல்வேறு கருத்துகள் எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ், எம், சி தலைவர் கனிமொழி, ஆசிரியர் வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் ஜெபஸ்தின், அஸ்பர், உதவி தலைமை ஆசிரியர் சதீஷ், மற்றும் ஆசிரியர்கள் கணேசன் ஜோதிராணி, குமரேசன், நாகேஷ், மற்றும் எஸ்.எம்.சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News