மாணவர்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய காட்சி
சுரண்டை எஸ்.ஆர்.பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
- இயேசு பிறப்பின் காட்சியை குடிலாக அமைத்து கிறிஸ்துமஸ் மரத்தை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காித்து வைத்தனா்.
- மாணவா்களின் நடனம், பாடல், நாடகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
சுரண்டை:
சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா ஆகியோா் கலந்து கொண்டனா். இயேசு பிறப்பின் காட்சியை குடிலாக அமைத்து கிறிஸ்துமஸ் மரத்தை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காித்து வைத்தனா். நிகழ்ச்சியில் மாணவா்களின் நடனம், பாடல், நாடகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இயேசு பிறப்பின் செய்தியை மாணவி அழகு காா்த்திகா வழங்கினாா்.
மாணவன் தனுஷ் வரவேற்புரை வழங்கினாா். தலைமை ஆசிாியா் மாாிக்கனி நன்றி கூறினார். மாணவன் விக்னேஷ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாணவா்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினா். ஆசிாியை மொ்லின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாா். ஆசிாியைகள் சகாய நிஷா, தங்கசுபா செல்வரத்தினம், ஆசிாியா் சாம் அலெக்சாண்டா் ஆகியோா் மாணவா்களை ஒருங்கிணைத்தாா்.