உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ் விழா: போதகர் வாழ்த்து

Published On 2022-12-25 15:44 IST   |   Update On 2022-12-25 15:44:00 IST
  • பாஸ்டர் யோவான் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி.
  • இருளில் வாழும் மக்களை வெளிச்சத்தின் பிள்ளைகளாக்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி காந்தி ரோட்டில் உள்ள சீயோன் பெந்தகோஸ்தே தேவசபையின் பாஸ்டர் யோவான் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இயேசு கிறிஸ்து இந்த உலகில் பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா என்ற தீர்க்கதரிசி ராஜரீகத்தையும், ஆளுகைையயும் தன் தோளின் மேல் ஏற்றுள்ள அவரது தன்மைகள் பலவற்றை தாங்கும் பெயர்களை முன்அறிவித்தான். அவரது நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமை உள்ள தேவன், நித்தியபிதா சமாதானப்பிரபு ஆகும்.

இந்த உலகத்தில் பிரவேசித்த போது, தேவதூதர்கள் தேவனுக்கு மகிமையும், இந்த பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என பாடினார். இந்த உலகிற்கு சமாதானத்தையும், ஆத்மீக மீட்பையும் கொடுக்கவே, ஏசுபிரான் அவதரித்தார்.

இருள் நிறைந்த உலகிற்கு அருட்பெருஞ்ஜோதியாக வெளிப்பட்டு, இருளில் வாழும் மக்களை வெளிச்சத்தின் பிள்ளைகளாக்கினார்.

உலகிற்கு சமாதானம் உண்டாக்க நிலை நாட்ட இயேசு வந்தார். இன்று கிறிஸ்துமஸ் நாளில் மக்கள் அனைவரும் துன்பங்களை கடந்து மகிழ்ச்சியுடன் வாழ பெந்தேகொஸ்தே மாமன்றத்தின் சார்பில் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News