உள்ளூர் செய்திகள்

பொடியனூரில் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் குழந்தைகள் தினவிழா

Published On 2023-11-15 08:01 GMT   |   Update On 2023-11-15 08:01 GMT
  • மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
  • வெற்றி பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

தென்காசி:

பாவூர்சத்திரம் அடுத்துள்ள ஆவுடையானுர் பஞ்சாயத்து பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அனைத்து மாணவர்களுக்கும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் வகுப்பு வாரியாக நடத்தப்பட்டது.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வேடத்தில் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழாவை முன்னிட்டு மாணவர்கள் அனைவரும் வண்ண வண்ண உடையில் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். பள்ளி ஆசிரியைகள் அனைவரும் மாணவர்களுக்காக கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

மாணவர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளில் பங்கு கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன். ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News