உள்ளூர் செய்திகள்
நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
- நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–யில் குழந்தைகள் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
- விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.திருமாறன், முதல்வர் எஸ்.முருகவேள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–யில் குழந்தைகள் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
விழாவிற்கு நெல்லை தொழிலாளர் உதவி ஆய்வாளர் நளினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம், குழந்தைத்தொழிலாளர் முறையினை அகற்றுதல் மற்றும் 1098 குழந்தைகள் ஹெல்ப்லைன் எண் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.திருமாறன், முதல்வர் எஸ்.முருகவேள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.