உள்ளூர் செய்திகள்

குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை சாவு

Published On 2023-06-18 14:26 IST   |   Update On 2023-06-18 14:26:00 IST
  • அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் திடீரென்று தவறி விழுந்தது.
  • குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பசுவராஜ். இவருக்கு 3 வயதில் உமாபதி என்ற மகனும் உள்ளது. இந்த குழந்தை வீட்டின் அருகே சம்பவத்தன்று விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் திடீரென்று தவறி விழுந்தது. இதில் குழந்தை நீரில் மூழ்கி பரிதபாமாக இறந்தது.

இதுகுறித்து பசுவராஜ் சூளகிரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News