உள்ளூர் செய்திகள்

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான சின்னம் அச்சிடப்பட்ட மஞ்சப்பைகளை கண்டமங்கலம் யூனியன் தலைவர் ஆர்.எஸ்.வாசன் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அருகில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவக்குமார், சண்முகம் ஆகியோர் இருந்தனர்.

கண்டமங்கலம் யூனியன் வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு

Published On 2022-07-20 09:53 GMT   |   Update On 2022-07-20 09:53 GMT
  • கண்டமங்கலம் யூனியன் வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • சின்னம் அச்சிட்ட மஞ்சப்பையினை பொதுமக்களுக்கு வழங்கினார்.

விழுப்புரம்:

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட விளையா ட்டுத்துறை சார்பில் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பான, இலச்சினை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கண்டமங்கலம் யூனியன் தலைவர் ஆர்.எஸ்.வாசன் தலைமை தாங்கி இலச்சினை மற்றும் சின்னம் அச்சிட்ட மஞ்சப்பையினை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவக்குமார், சண்முகம் , ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன் , மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News