உள்ளூர் செய்திகள்
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
செங்கல்பட்டு:
மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி துவங்குகிறது. இதில் 188 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு செங்கல்பட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஆட்சியர் ராகுல் நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.