உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற சென்னை பக்தர் திடீர் உயிரிழப்பு

Published On 2023-06-05 03:16 GMT   |   Update On 2023-06-05 03:16 GMT
  • செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும்போது ராஜேஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
  • டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

திருவண்ணாமலை:

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவர், நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்றார். பின்னர் அவர் கிரிவலம் சென்று கொண்டிருந்தார்.

செங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகே நடந்து செல்லும்போது ராஜேஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது சக பக்தர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News