உள்ளூர் செய்திகள்

குரும்பூர் ரெயில்நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2023-04-19 09:39 GMT   |   Update On 2023-04-19 09:39 GMT
  • உமா எஸ்தர் குரும்பூர் ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
  • உமா கழுத்தில் கிடந்த 4 ½பவுன் தாலி செயினை மர்ம நபர் பறித்து கொண்டு தப்பி சென்றார்.

குரும்பூர்:

குரும்பூர் அருகே உள்ள யோகரத்தினம் நகரை சேர்ந்தவர் அருள்தாஸ் மனைவி உமா எஸ்தர் (வயது 41). இவர் நேற்று காலை குரும்பூர் ரெயில் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் உமா கழுத்தில் கிடந்த 4 ½பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News