உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2022-10-02 09:54 GMT   |   Update On 2022-10-02 09:54 GMT
  • வேம்பரசி என்பவர் இரவில் வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.
  • மர்ம நபர்களால் இருவர் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

நீடாமங்கலம்:-

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவல் சரகத்திற்குட்பட்ட தேப்பெருமாநல்லுரில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த ராஜாங்கம் என்பவரது மனைவி வேம்பரசி (வயது 49) என்பவர் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்ெதாடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News