உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பெரியகுளத்தில் வீடு புகுந்து செல்போன் திருட்டு

Published On 2023-04-10 07:06 GMT   |   Update On 2023-04-10 07:06 GMT
  • கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது 2 செல்போன்களை திருடப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து 2 செல்போ ன்களை பறிமுதல் செய்தனர்.

தேனி:

பெரியகுளம் ஏ.மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவர் தேனியில் செல்போன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் அங்கு புகுந்த பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் (29) என்பவர் 2 செல்போன்களை திருடிச் சென்றார்.

இது குறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து 2 செல்போ ன்களை பறிமுதல் செய்தனர். சிவக்குமார் மீது தென்கரை, பெரியகுளம், பழனி செட்டிபட்டி போலீசில் ஏற்கனவே வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேல்மங்கலத்தை சேர்ந்தவர் தங்கமுத்து ப்பிள்ளை (80). இவர் பட்டாளம்மன் முத்தையா கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக உள்ளார். சம்பவத்தன்று அங்கு புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகளில் இருந்த வெள்ளி நகையை திருடிச் சென்றனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News