உள்ளூர் செய்திகள்

அம்பை அருகே செல்போன் கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-12-30 09:07 GMT   |   Update On 2022-12-30 09:07 GMT
  • அம்பை அருகே உள்ள வி.கே.புரம் சிவந்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசிங் செல்போன் கடை நடத்தி வந்தார்.
  • நேற்று மாலை திடீரென தனசிங் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

நெல்லை:

அம்பை அருகே உள்ள வி.கே.புரம் சிவந்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசிங் (வயது 32).

செல்போன் கடை

இவர் அங்கு செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நி லையில் கடந்த 2 வருடங்க ளுக்கு முன் தனசிங்கின் மனைவி உடல்நிலை பாதிப்பால் இறந்துள்ளார்.

அதில் இருந்து தனசிங் மனமு டைந்த நிலையில் காணப் பட்டார். மேலும் அவர் கடைக்கும் சரியாக செல்லாமல், யாரி டமும் பேசாமல் இருந்துள் ளார்.

தற்கொலை

நேற்று மாலை திடீரென தனசிங் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தனசிங் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News